பதிவு செய்த நாள்
29 ஆக2015
11:25
‘போர்டு’ கார் நிறுவனம், புதுப்பிக்கப்பட்ட, ‘எண்டெவர்’, எஸ்.யு.வி., ரக கார்களை, நம்நாட்டில் அறிமுகப்படுத்த ஆயத்தமாகியுள்ளது. இதில், ஆரம்ப நிலை வாகனங்களில், நான்கு சிலிண்டர், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்; அதற்கு அடுத்த நிலைகளில் உள்ள வாகனங்களில், ஐந்து சிலிண்டர், 3.2 லிட்டர் டீசல் இன்ஜினும், பொருத்தப்பட்டுள்ளன. புதிய அவதாரம் எடுத்திருக்கும், எண்டெவர், ‘நார்மல், ஸ்னோ, மட், கிராஸ், சேன்ட், ராக்’ ஆகிய மாடல்களில் கிடைக்கும். இதில், ‘நார்மல்’ மாடல், தினசரி பயன்பாட்டுக்கான, வழக்கமான சாலைப் பகுதிகளுக்காக வடிவமைக்கப்பட்டது. ‘ஸ்னோ, மட், கிராஸ்’ ஆகியவை, சாலையில் அதிவேகத்தில் சென்றாலும், சக்கரம் வழுக்காமல் செல்ல உதவும். ‘சேன்ட்’ மாடல், மணற்பாங்கான பகுதிகளில், அசராமல், சீராக செல்லக்கூடியது. இதில், ‘சாட்நாவ்’ என்னும் வசதி இருப்பதால், ‘ரிவர்ஸ் கியர்’ போட்டதுமே, 2 ரிவர்ஸ் கேமரா தானாக இயங்க துவங்கும். மேலும், பார்க்கிங் பகுதியில் காலியிடத்தை, கண்டுபிடித்து டிரைவருக்கு, தெரிவிக்கும் சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளது. புதிய எண்டெவர், சில மாதங்களில் நம் நாட்டிற்கு வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|