பதிவு செய்த நாள்
08 அக்2015
10:54
மும்பை : சர்வதேச நாடுகளின் சந்தைகளில் ஏற்பட்டுள்ள உயர்வின் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் இன்று(அக்.,08) உயர்வுடன் துவங்கின. கடந்த 6 நாட்களாக தொடர்ந்து உயர்வுடன் காணப்படும் மும்பை பங்கச்சந்தையான சென்செக்ஸ், இன்று 84 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி உள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில்(காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 84.26 புள்ளிகள் உயர்ந்து 27,120.11 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 19.35 புள்ளிகள் அதிகரித்து 8196.75 புள்ளிகளாகவும் உள்ளன. ஐடி, தொழில்நுட்பம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் உயர்வால் பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின.
ஆனால் 10 மணிக்கு மேல் முதலீட்டாளர்கள் லாபம் நோக்கம் கருதி பங்குகளை விற்க தொடங்கியதால் பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டன. காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 87 புள்ளிகளும், நிப்டி 22 புள்ளிகளும் சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|