பதிவு செய்த நாள்
27 அக்2015
10:11
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 99.25 புள்ளிகள் சரிந்து 27,262.71-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 28.20 புள்ளிகள் சரிந்து 8,232.35-ஆகவும் வர்த்தகமாகின.
அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதம் தொடர்பாக எடுக்கப்பட இருக்கும் முக்கிய முடிவுகள், நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகி வருவதால், அதுதொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகநேர துவக்கத்தில், 238 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 280 நிறுவன பங்குகள் சரிந்தும், 29 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|