பதிவு செய்த நாள்
19 ஜன2016
13:55
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, தொடர்ந்து, 13வது மாதமாக, டிசம்பரில், 14.75 சதவீதம் பின்னடைவை சந்தித்து, 1.46 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
உலக நாடுகளில் பெட்ரோலியம், பொறியியல், வேளாண் விளை பொருட்கள், நவரத்தினங்கள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றுக்கான தேவை குறைந்துள்ளதால், இந்தியாவின் ஏற்றுமதி சரிவை சந்தித்து வருகிறது. டிசம்பரில், அரிசி, முந்திரி, எண்ணெய் புண்ணாக்கு, எண்ணெய் வித்துக்கள், கடல் உணவுப் பொருட்கள், தோல் பொருட்கள், பருத்தி நூலிழை, ஜவுளி ஆகியவற்றின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஏப்., - டிச., வரையிலான, ஒன்பது மாதங்களில், நாட்டின் ஏற்றுமதி, 18.06 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்து, 12.97 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது; இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 15.83 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இறக்குமதியும் சரிவு!
* டிசம்பரில், இறக்குமதி, 3.88 சதவீதம் சரிவடைந்து, 2.24 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இருந்த போதிலும், தங்கம் இறக்குமதி, 25,080 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது
* நாட்டின் இறக்குமதி, கடந்த டிசம்பர் வரையிலான, ஒன்பது மாதங்களில், 15.87 சதவீதம் சரிவடைந்து, 19.52 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது
* இதே காலத்தில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 6.54 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது
* ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் உள்ள இடைவெளி, வர்த்தகப் பற்றாக்குறை எனப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|