பதிவு செய்த நாள்
22 ஜன2016
18:13
மும்பை : கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டதன் பயனாக இந்திய பங்குச்சந்தைகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. கடந்த சில தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை கண்டன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, சீனா பொருளாதார மந்தம், ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் வாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குச்சந்தைகள் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. காலையில் வர்த்தகம் துவங்கும்போதே சுமார் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ். தொடர்ந்து ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றத்தாலும், கச்சா எண்ணெய் விலை சரிவிலிருந்து சற்று முன்னேற்றம் கண்டதாலும், ரூபாயின் மதிப்பு உயர்ந்ததாலும் இந்திய பங்குச்ந்தைகள் மாலையில் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 473.45 புள்ளிகள் உயர்ந்து 24,435.66-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 145.65 புள்ளிகள் உயர்ந்து 7,422.45-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|