பதிவு செய்த நாள்
09 பிப்2016
18:16
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவை சந்தித்தது. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிப்டி 100 புள்ளிகளும் சரிவுடன் துவங்கின. ரூபாயின் மதிப்பு ரூ.68 ஆக சரிந்தது, அந்நிய முதலீடு அதிகளவில் வெளியேற்றம் போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 266.44 புள்ளிகள் சரிந்து 24,020.98-ஆகவும், நிப்டி 89.05 புள்ளிகள் சரிந்து 7,298.20-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ஐடி தொடர்பான பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. குறிப்பாக டெக் மகிந்திரா 4.89 சதவீதமும், எச்சிஎல்., 4.52 சதவீதமும், டிசிஎஸ்., 3.68 சதவீதமும், இன்போசிஸ் 3.46 சதவீதமும், விப்ரோ 1.72 சதவீதமும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|