பதிவு செய்த நாள்
18 பிப்2016
05:01
புதுடில்லி : உலக வர்த்தக அமைப்பின், சுலபமான வர்த்தக பரிவர்த்தனை தொடர்பான ஒப்பந்தத்திற்கு, நேற்று மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இக்கூட்டத்திற்கு பின், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலி தீவில், 2013ல் நடைபெற்ற, மாநாட்டில், உலக நாடுகளின் பரஸ்பர வர்த்தகத்திற்கு தடையாக உள்ள அம்சங்களை நீக்கி, சுலபமாக வர்த்தகம் புரிவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு, அதன்படி, வர்த்தக நடைமுறைகளை கண்காணிக்க, தேசிய குழுவை அமைப்பது என, அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும். சுங்க நடைமுறைகளை எளிமையாக்கி, சுமுகமான சரக்கு போக்குவரத்து, கண்காணிப்பு ஆகியவற்றுக்கு, இந்த ஒப்பந்தம் வகை செய்யும். இது, உலக நாடுகளுடனான நம் வர்த்தகத்தை உயர்த்த உதவும் இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|