பதிவு செய்த நாள்
20 பிப்2016
04:03
புதுடில்லி:‘ஸ்டார்ட் அப் இந்தியா’வுக்கு மேலும் வலுசேர்க்க, எம்’டிவி’ கலர்ஸ் போன்ற சேனல்களை நடத்தும், ‘வயாகாம் 18’ நிறுவனத்துடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்திற்காக, மத்திய தொழில் மற்றும் மேம்பாட்டு கொள்கை துறை, எம்,‘டிவி’ குழுமத்தை சேர்ந்த, ‘வயாகாம் 18’ என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சிகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை, சேனல்களில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இந்நிகழ்ச்சிகளில், 300 கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இணையவிருக்கின்றனர். இதுகுறித்து, மத்திய அரசின் செயலர் அமிதாப் கான்ட் கூறுகையில், ‘‘இந்த முயற்சி, இளம் தலைமுறையினரை ஊக்குவித்து, அவர்களின் கனவை லட்சியமாக மாற்றவும், திறமையான தொழில் முனைவோராக திகழவும் உதவும்’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|