பதிவு செய்த நாள்
20 பிப்2016
16:03
புதுடில்லி : சில ஆண்டுகளுக்கு முன், உலகிலேயே, மிகவும் விலை குறைவான, 'நானோ' காரை, டாடா நிறுவனம் அறிமுகம் செய்த போது, பல நாடுகள் வியப்புடன் பார்த்தன. தற்போது, உலகிலேயே மிகவும் மலிவான, ஸ்மார்ட் மொபைல் போனை, 251 ருபாய்க்கு அறிமுகம் செய்வதாக, டில்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது, பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
'இது சாத்தியமில்லை, ஏமாற்று வேலை' என, சில தரப்பினர் கூறி வரும் நிலையில், 'இந்த மொபைல் போனை வேண்டி, முன்பதிவு செய்யும் அனைவருக்கும், ஜூன் மாதத்திற்குள் அளிப்போம்' என, 2015 செப்டம்பரில் உருவான, ரிங்கிங் பெல் நிறுவனம் கூறியுள்ளது.
இதனிடையே, ஆன் - லைன் மூலமாக, 25 லட்சம் மற்றும் டீலர்கள் உட்பட, இதர வகையில், 25 லட்சம் என, மொத்தம், 50 லட்சம் மொபைல் போன்களை ஜூன் மாதத்தற்குள் விற்க, மோகித் இலக்கு நிர்ணயித்து உள்ளார். தபால் செலவு உட்பட, தலா, 291 ரூபாய் வீதம், இதுவரை முன்பதிவு செய்துள்ள, 30 ஆயிரம் பேரிடமிருந்து, முன்பணமாக, 87 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது
மொத்தம், 50 லட்சம் மொபைல் போன்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதன் மூலம், 145.5 கோடி ரூபாய் மொத்தமாக வசூலாகும். பல்வேறு தரப்பினர் மற்றும் இந்திய செல்லுலார் சங்கம், சந்தேகத்தை எழுப்பியுள்ளதால், இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக, மத்திய தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. 'ஏதாவது தவறு நடப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலோ, புகார் வந்தோலோ, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|