பதிவு செய்த நாள்
23 பிப்2016
03:16
லண்டன் : டி.சி.எஸ்., என சுருக்கமாக அழைக்கப்படும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம், பிரிட்டனின், ‘பிசினஸ் சூப்பர் பிராண்டு’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. பிரிட்டனின் டி.சி.பி.ஏ., அமைப்பு, தரம், நம்பிக்கை, நன்மதிப்பு ஆகிய மூன்று காரணிகளின் அடிப்படையில், சூப்பர் பிராண்டு விருதுக்கு நிறுவனத்தை தேர்வு செய்கிறது. அதன்படி, இந்தாண்டு விருதுக்கு, 1,500 பிராண்டுகள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில், டி.சி.எஸ்., ‘சூப்பர் பிராண்டு’ நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில், தகவல் தொழில்நுட்பத் துறையில், வாடிக்கையாளர்களின் முழு திருப்தியை பெற்ற நிறுவனங்களில், டி.சி.எஸ்., முதலிடத்தில் உள்ளதாக, டி.சி.பி.ஏ., புகழாரம் சூட்டியுள்ளது.‘‘இந்த விருது, பிரிட்டனில் உள்ள, 11 ஆயிரம் டி.சி.எஸ்., ஊழியர்களின் உழைப்பிற்கு கிடைத்த பெருமை,’’ என, டி.சி.எஸ்., நிறுவனத்தின் பிரிட்டன், அயர்லாந்து பிரிவுகளின் தலைவர் சங்கர் நாராயணன் தெரிவித்தார். இந்தியாவில், டி.சி.எஸ்., நிறுவனம், தகவல் தொழில்நுட்பத் துறையில், முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|