பதிவு செய்த நாள்
23 பிப்2016
03:26
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி., நிறுவனம், அதன் எண்ணெய் வயலில் இருந்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 2009 முதல், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எரிவாயுவை உறிஞ்சிவிட்டதாக, குற்றஞ்சாட்டி உள்ளது.இது தொடர்பாக, இந்த விவகாரத்தை விசாரித்து வரும், சட்ட ஆணைய தலைவர் ஏ.பி.ஷா தலைமையிலான ஒருநபர் குழுவிடம், ஓ.என்.ஜி.சி., அறிக்கை அளித்துள்ளது. அதன் விவரம்:வங்காள விரிகுடாவில், கிருஷ்ணா – கோதாவரி படுகையில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு, ‘கேஜி – டி6’ எண்ணெய் வயல் ஒதுக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில், கடலடியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை கண்டறிய வேண்டி, 2001 மற்றும் 2007ல், நில அதிர்வு தகவலை ரிலையன்ஸ் பெற்றுள்ளது.அத்துடன், தன் எல்லையையொட்டி, ஓ.என்.ஜி.சி.,க்கு ஒதுக்கப் பட்ட, ‘கேஜி – டி5’ எண்ணெய் வயல் பகுதியின் தகவலையும், அனுமதியின்றி பெற்றுள்ளது. அதன்மூலம், தன் பகுதியில் இருந்து, ஓ.என்.ஜி.சி., எல்லைக்குள் புகுவதற்கு வழியுள்ளதை, ரிலையன்ஸ் தெரிந்து கொண்டது. இந்த தகவல் மூலம், ஓ.என்.ஜி.சி., எல்லையில் இருந்து, சரியாக, 50 மீ., தொலைவில், குறிப்பிட்ட பகுதியில், நான்கு எண்ணெய் கிணறுகளை, ரிலையன்ஸ் தோண்டியது. அங்கிருந்து, அத்துமீறி, ஓ.என்.ஜி.சி.,யின் பகுதிக்கு உட்பட்ட எரிவாயுவை, ரிலையன்ஸ் சுரண்டி எடுத்து விட்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நன்றாக திட்டமிட்டு, ஆறு ஆண்டுகளில், ஓ.என்.ஜி.சி.,க்கு சொந்தமான, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எரிவாயுவை, தெரிந்தே உறிஞ்சிவிட்டது. இந்த இழப்பை, ஆண்டுக்கு, 18 சதவீத வட்டியுடன் திருப்பித் தர உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அதெல்லாம் கிடையாது!ஓ.என்.ஜி.சி.,யின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்துதான், எரிவாயுவை உற்பத்தி செய்தோம். இதில், அத்துமீறல் எதுவும் கிடையாது. – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்தி தொடர்பாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|