பதிவு செய்த நாள்
24 பிப்2016
00:34
* 5.47 லட்சம் கோடி ரூபாய், நேரடி வரி மூலமாக, கடந்த பிப்ரவரி, 13ம் தேதி வரை அரசுக்கு வந்திருக்கிறது. * 17 துறைகளின் ஏற்றுமதி, கடந்த ஜனவரியில் சரிவைச் சந்தித்திருக்கிறது.* 5,029 கோடி ரூபாய் திரட்ட, இந்திய அரசு, எ.டி.பி.சி., நிறுவனத்தின், 5 சதவீத பங்குகளை விற்பனை செய்யவிருக்கிறது. * 32,000 கோடி ரூபாயை, ஆண்டிற்கு சம்பளமாக கொடுக்க வேண்டியதிருக்கும், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ரயில்வே நிர்வாகம் ஏற்றால்.* 11.6 சதவீதம் என்ற அளவுக்கு, கடந்த, 2015ல், ஐ.டி., போன்ற நிறுவன வேலைக்கான விண்ணப்பங்களில் முறைகேடுகள் நடந்திருக்கிறது என்கிறது, ஓர் ஆய்வறிக்கை.* 843 நிறுவனங்கள், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் நடத்தும், நான்கு நாள், ‘டிபன்ஸ் எக்ஸ்போ’ கண்காட்சியில் கலந்து கொள்ள இதுவரை பதிவு செய்திருக்கின்றன.* 50 லட்சம் போன்களை, ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம் முதற்கட்டமாக இறக்குமதி செய்யவிருப்பதாக, அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|