பதிவு செய்த நாள்
25 பிப்2016
03:35
புதுடில்லி : மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், அடுத்த, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், பெட்ரோல் இன்ஜின்களை தயாரிப்பதற்காக, 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம், தற்போது, 1.5 லி., மற்றும், 1.6 லி., பெட்ரோல் இன்ஜின்களை சொந்தமாக தயாரிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இத்துடன், கொரியாவின், சங்யாங் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து, 2.2 லி., பெட்ரோல் இன்ஜின் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளது. சங்யாங் நிறுவனத்துடன், மகிந்திரா நிறுவனம் ஏற்கனவே 1.2 லி., ‘எம் பால்கன் – ஜி 80’ பெட்ரோல் இன்ஜினை தயாரித்துள்ளது. இந்த பெட்ரோல் இன்ஜின், மகிந்திரா நிறுவனத்தின், ‘கேயுவி 100’ காரில் பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல, சங்யாங் நிறுவனத்தின், ‘டிவோலி’ காரிலும், இதே இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|