பதிவு செய்த நாள்
25 பிப்2016
03:36
புதுடில்லி : ‘இந்திய நிறுவனங்கள், மூல மருந்தை மேலும் தரமான முறையில் தயாரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அமெரிக்க, ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்தியாவை வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில், இந்திய மருந்துகளின் பங்களிப்பு, முறையே, 33 மற்றும் 25 சதவீதமாக உள்ளது. அதனால், சுகாதார முறையில், தரமாக தயாரிக்கப்படும் இந்திய மருந்துகளை மட்டுமே, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுளும் அனுமதிக்கின்றன; அவை, இந்திய மருந்து தொழிற்சாலைகளை ஆய்வுசெய்து, விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் மருந்து இறக்குமதிக்கு, தடை விதிக்கின்றன.சர்வதேச மூல மருந்து சந்தையில், இந்தியா, பெரும்பங்கை வகிக்கிறது. ‘அதை தக்கவைக்க, மருந்து தயாரிப்பில் தரம் அவசியம்’ என, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், இந்தியாவை வலியுறுத்தியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|