பதிவு செய்த நாள்
01 மார்2016
07:36
புதுடில்லி:பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.02 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. அதேசமயம், டீசல் விலை, லிட்டருக்கு, 1.47 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அடிப்படையிலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாற்றத்தை வைத்தும், இந்தியாவில், பெட்ரோல், டீசல் விலையை, 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன. கச்சா எண்ணெயின் விலை கடுமையாக குறைந்தபோதிலும், அதற்கு ஏற்றவகையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல், அவற்றுக்கான வரியை உயர்த்தியதால், விலை குறைப்பு பயன் மக்களுக்கு கிடைக்க வில்லை.
இந்நிலையில், மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை, நேற்று மாற்றம் செய்யப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.02 ரூபாய் குறைக்கப்பட்டது. அதேசமயம், டீசல் விலை, லிட்டருக்கு, 1.47 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சென்னையில், பெட்ரோல் லிட்டருக்கு, 3.37 ரூபாய் குறைந்து, 56.08 ரூபாய்க்கு விற்கப்பட்டது. டீசல் லிட்டருக்கு, 1.38 ரூபாய் அதிகரித்து, 47.13 ரூபாய்க்கு விற்கப்பட்டது.டீசல் விலையை பொறுத்தவரை, கடந்த மாதத்தில், இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் விலை, தொடர்ந்து, ஏழு முறை விலை குறைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கலால் வரி உயர்வால், விலை குறைப்பின் பயன் மக்களுக்கு கிடைக்கவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|