பதிவு செய்த நாள்
05 மார்2016
03:54
புதுடில்லி:‘மாற்றம் ஒன்றே மாறாதது’– இதை நன்கு புரிந்து கொண்ட பல கார்ப்பரேட் நிறுவனங்கள், ‘டிஜிட்டல்’ தொழில்நுட்ப உலகின் வேகமான மாற்றங்களுக்குத் தயாராகி வருகின்றன.
இதற்காக, பல காலமாக பின்பற்றி வரும், வர்த்தக நடைமுறைகள், ஊழியர் கொள்கைகள் உள்ளிட்டவற்றில், புதிய அணுகுமுறையை பின்பற்றத் துவங்கிஉள்ளன. பிரிட்டனைச் சேர்ந்த டிலேட்டி நிறுவனம், உலகளவில், மனித வளம், தலைமை பண்பு உள்ளிட்டவை தொடர்பாக, ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்தாண்டு, 130 நாடுகளில், ஏழாயிரத்திற்கும் அதிகமான நிறுவனங்களைச் சேர்ந்த, மனிதவள மேலாளர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.
மறு சீரமைப்புஅதன் விவரம்:கடந்த, மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது, அவர்களை தக்க வைத்துக் கொள்வது, தலைமைப் பண்புகளை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுத்தது தெரியவந்தது.
ஆனால், இந்தாண்டு, ஆய்வில் பங்கேற்றோரில், 98 சதவீதம் பேர், ‘சர்வதேச வர்த்தகத்திற்கு ஏற்ப, நிறுவனங்களின் செயல்பாடுகளை மறுசீரமைக்க வேண்டியது அவசியம்’ என, தெரிவித்துள்ளனர். அதில், 39 சதவீத நிறுவனங்கள், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துவக்கி விட்டன; 6 சதவீத நிறுவனங்கள், சீர்திருத்தத்திற்கு திட்டமிட்டுள்ளன. இந்நிறுவனங்கள், அரதப் பழசான, ஒரு நபர் சார்ந்த தலைமை, பாரம்பரிய வணிக நடைமுறை ஆகியவற்றுக்கு விடை கொடுத்து விட்டு, ஊழியர் குழுக்களுக்கு, முன்னுரிமை அளித்து, செயல்பட்டு வருகின்றன.
இக்குழுக்களில் உள்ளோருக்கு, தலைமை பண்புக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், தலைமை பொறுப்பில் உள்ள ஒருவரின், விருப்பு வெறுப்பில், செயல்படும் போக்கைத் தவிர்த்து, ஊழியர் குழுக்களின் ஆலோசனையுடன் நிர்வாகம் நடைபெறுகிறது.
டிஜிட்டல் மயம்lஊழியர்கள் ஒருங்கிணைந்து, பணிகளை சுலபமாகச் செய்வதற்கான சூழலை, நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இது, நிறுவனங்களுக்கு கூடுதல் வாடிக்கையாளர்களை பெற்றுத் தந்து, வர்த்தகம் பெருக துணை புரிகிறது. இந்நிறுவனங்கள், ஊழியர்கள், தங்களுக்கு விருப்பமான பணி நேரத்தை தேர்வு செய்யவும், பகுதி நேரமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றவும் வாய்ப்பளிக்கின்றன.
அதனால், இந்நிறுவனங்களில், முதலாளி – தொழிலாளி என்ற பேதம் மறைந்து வருகிறது. இதற்கு, அனைத்து பணிகளும் ‘டிஜிட்டல்’ மயமாகி வரும் வசதி, மிகப்பெரிய அளவில் துணை புரிகிறது. 42 சதவீத நிறுவனங்கள், ஊழியர்களுடனான அவற்றின் நிர்வாகச் செயல்பாடுகளை, மொபைல் போன் மூலம் இணைத்துள்ளன.
பிரமிட் முறை மாறும்இதனால், ஊழியர்கள் எந்த நேரத்திலும், எங்கிருந்தும், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள துணை புரிகிறது. ஊழியர்களின் திறனை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கென்றே, மனிதவள மேம்பாட்டு துறையில், புதிய பதவிகள் உருவாக்கப்பட உள்ளன. இது போன்ற சீர்திருத்தங்களால், ‘பிரமிட்’ போன்ற நிர்வாக நடைமுறை அடியோடு மாறும். ஏனெனில், இத்தகைய முறையில் போதுமான அளவிற்கு, தலைமைப் பண்பாளர்களை உருவாக்க முடியவில்லை என்பது, கடந்த கால வரலாறு. அதை கருத்தில் கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள், புதிய கொள்கைக்கு மாறத் துவங்கிஉள்ளது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|