பதிவு செய்த நாள்
05 மார்2016
14:24
புதுடில்லி: மத்திய அரசு மூன்றாவது முறையாக, வரும் 8ம் தேதி, தங்க சேமிப்பு பத்திரத்தை வெளியிடுகிறது. இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தங்க சேமிப்பு பத்திரங்களில், முதலீடு செய்வதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 8ம் தேதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும். முதலீட்டாளர்களுக்கு, வரும் 29ம் தேதி, தங்க சேமிப்பு பத்திரங்கள் வழங்கப்படும். வங்கிகள் மற்றும் குறிப்பிட்ட அஞ்சலகங்களில், தங்க சேமிப்பு பத்திரங்கள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், 2015 நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதில், 915 கிலோ தங்கம் மூலம், 246 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. இந்தாண்டு ஜனவரியில், இரண்டாவது முறையாக, தங்க சேமிப்பு பத்திரம் வெளியிடப்பட்டது. அதில், 798 கோடி ரூபாய் திரட்டப்பட்டது; 3,071 கிலோ மதிப்பிலான தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|