பதிவு செய்த நாள்
07 மார்2016
07:23
புதுடில்லி : இந்தியாவில் இருந்து, சான் பிரான்சிஸ்கோ நகருக்கு, முழுவதும் பெண்களே இயக்கும் விமான சேவையை வழங்க உள்ளது ஏர் – இந்தியா நிறுவனம்.
பொதுத்துறையை சேர்ந்த ஏர் – இந்தியா நிறுவனம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு, விமான சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. ஏர் – இந்தியா நிறுவனம், 1985ல் முதல் முறையாக, பெண்கள் குழுவை கொண்டு, விமானங்களை இயக்கியது. இந்நிறுவனம், ஆண்டுதோறும், மகளிர் தினத்தை முன்னிட்டு, முற்றிலும் பெண்கள் இயக்கும் விமான சேவையை வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது, மகளிர் தினத்தை முன்னிட்டு, மார்ச், 6ம் தேதி, டில்லியில் இருந்து, சான் பிரான்ஸ்சிஸ்கோ நகருக்கு, நான்கு பெண் விமானிகள், 14 பணிப்பெண்கள் கொண்ட, முற்றிலும் பெண்களை உள்ளடக்கிய குழுவுடன் விமானத்தை இயக்க உள்ளது. இந்த விமானம், அங்கிருந்து, 8ம் தேதி புறப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|