பதிவு செய்த நாள்
08 மார்2016
06:58
புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, அதன் பெண் ஊழியர்கள், வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் கூறியதாவது:மக்கள் தொகையில், பெண்கள், 48 சதவீதம் உள்ள போதிலும், பணிகளை பொறுத்தவரை, ஆண்களை விட, மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். குழந்தை பெறுதல், பராமரித்தல் போன்றவற்றுக்காக, ஏராளமான பெண்கள், வேலையை இடையிலேயே விட்டு விடுகின்றனர். இத்தகைய போக்கை தடுக்க, வங்கியின் பெண் ஊழியர்கள், வீட்டு வேலை செய்து கொண்டே, அலுவலகப் பணிகளையும் மேற்கொள்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, ‘ஆன்லைன்’ வங்கிக் கணக்கு துவக்குதல், ஏற்றுமதி – இறக்குமதி பணப் பட்டுவாடா ஆவணங்கள் மற்றும் காசோலைகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணியில், முக அடையாளம் மூலம் மட்டுமே, ஒருவர், வங்கி அலுவல்களை கையாள முடியும் என்பதுடன், மூன்று அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால், அன்னியரால் வங்கி நடவடிக்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, உறுதியாக கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|