பதிவு செய்த நாள்
12 மார்2016
02:27
புதுடில்லி:‘கடந்த ஜனவரியில், தென்னிந்தியாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், நாட்டின் தொழில் உற்பத்தி, குறைந்து இருக்கும்’ என, ராய்ட்டர் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில், கடந்த ஜனவரியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, சென்னையில், குடியிருப்புகள் மட்டுமின்றி, ஏராளமான தொழிற்சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த தொழில் உற்பத்தி குறியீடு, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, கடந்த ஜனவரியில், மைனஸ் 0.15 ஆக குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு, டிசம்பரில், மைனஸ் 1.3 ஆக இருந்தது. தயாரிப்பு துறையில் அடங்கியுள்ள, 22 பிரிவுகளின் உற்பத்தியும் குறைந்துள்ளது; அதனால், தயாரிப்பு துறை உற்பத்தி, மைனஸ் 0.8 சதவீதம் குறையும்.இத்துறையின் உற்பத்தி, நடப்பு, 2015 – 16ம் நிதியாண்டில், ஏப்., – செப்., வரையிலான அரையாண்டில், 4.2 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. எனினும், அக்., – டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், இத்துறையின் உற்பத்தி, 0.9 சதவீதம் சரிவடைந்தது. அதேசமயம், நிலக்கரி, மின்சாரம் ஆகியவற்றின் உற்பத்தி, முறையே, 13.5 சதவீதம் மற்றும், 6 சதவீதம் உயர்ந்து இருக்கும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது.
மோட்டார் வாகனம்:‘இந்தாண்டு, ஜனவரியில், வாகன துறையின் உற்பத்தி, கடந்த ஆண்டு, இதே மாதத்தை விட, 1.3 சதவீதம் குறைந்துள்ளது’ என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த பிப்ரவரியில், அரியானாவில் ஜாட் சமூகத்தினர் நடத்திய இட ஒதுக்கீடு போராட்டம் காரணமாக, கார் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுஉள்ளது. இது, பிப்ரவரியில், வாகன துறையின் உற்பத்தி வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|