பதிவு செய்த நாள்
13 மார்2016
07:48
புதுடில்லி : இறக்குமதி வரி அதிகரிப்புக்கு, கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது மருத்துவ சாதனங்கள் துறை.மருத்துவ சாதனங்களுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்கும் முடிவுக்கு, மிகவும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது, மருத்துவ சாதனங்கள் துறை. இந்த வரி உயர்வால், தவிர்க்க முடியாமல், நோயாளிகளுக்கு அதிக செலவாகும் என்றும், 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான இத்துறையும் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சுங்க வரி, 7.3 சதவீதம் ஏற்றப்பட்டிருக்கிறது. பக்கத்து நாடுகளில் எல்லாம் சுங்க வரி அதிகபட்சம் ஐந்து சதவீதம்தான் விதிக்கப்படுகிறது. ஆனால், நம்நாட்டில், 18 முதல் 28 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது. 75 சதவீத மருத்துவ சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால், வரிச் சுமையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர் இத்துறை சார்ந்தவர்கள்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|