ஆம­தாபாத் விமான ஓடு­தளம்  ஏப்­ரலில் புதுப்­பிப்பு பணிஆம­தாபாத் விமான ஓடு­தளம் ஏப்­ரலில் புதுப்­பிப்பு பணி ... நுழைவு வரி விவகாரம்; ஒடிசா அரசுக்கு சாதகம்; பல ஆயிரம் கோடி கிடைக்கும் நுழைவு வரி விவகாரம்; ஒடிசா அரசுக்கு சாதகம்; பல ஆயிரம் கோடி கிடைக்கும் ...
வங்கி கடனை தரா­தோ­ருக்கு செபியும் தடை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2016
07:53

புது­டில்லி : வசதி இருந்தும், வேண்­டு­மென்றே வங்கிக் கடனை திரும்பச் செலுத்­தாமல் உள்­ளோரின் பங்கு வெளி­யீட்­டிற்கு தடை விதிக்க, பங்கு சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, ‘செபி’ முடிவு செய்­துள்­ளது.
டில்­லியில், ‘செபி’யின் இயக்­குனர் குழு கூட்டம், நேற்று நடை­பெற்­றது. இதில், மத்­திய நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்லி, ‘செபி’ தலைவர் யு.கே.சின்கா உள்­ளிட்டோர் கலந்து கொண்­டனர். இக்­கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட முக்­கிய முடி­வுகள் குறித்து, யு.கே.சின்கா செய்­தி­யா­ளர்­க­ளிடம் கூறி­ய­தா­வது:வசதி படைத்த பலர், வங்­கியில் வாங்­கிய கடனை, திரும்பத் தர மறுக்­கின்­றனர். அவர்கள், ‘வேண்­டு­மென்றே கடனை திரும்பத் தராதோர்’ பட்­டி­யலில் சேர்க்­கப்­ப­டு­கின்­றனர். அத்­த­கை­யோ­ருக்கு, வேறு எந்த வங்­கியோ அல்­லது நிதி நிறு­வ­னமோ கடன் வழங்­காது. அது­போன்ற விதி­மு­றையை, ‘செபி’யும் உரு­வாக்­கி­யுள்­ளது.
அதன்­படி, வச­தி­யி­ருந்தும் கடனை திரும்பத் தராதோர் பட்­டி­யலில் இடம்­பெறும் நபர், பங்கு வெளி­யீட்டில் இறங்க தடை விதிக்­கப்­படும். அவர், பங்கு சந்­தையில் பட்­டி­ய­லி­டப்­பட்ட எந்த ஒரு நிறு­வ­னத்தின் தலைமை பொறுப்­பையும் ஏற்க முடி­யாது.பிற நிறு­வ­னங்­களின் நிர்­வாக குழுக்­களில், இயக்­குனர் உள்­ளிட்ட முக்­கிய பொறுப்­பு­களை வகித்­தாலும், புதிய விதி­மு­றைப்­படி, அவர் தகு­தி­யி­ழந்­தவர் ஆவார். மேலும், அவர், பரஸ்­பர நிதியம், பங்கு தரகு நிறு­வனம் போன்­ற­வற்­றையும் துவக்க முடி­யாது.இந்த புதிய விதி­மு­றைகள், தனி நபர் மற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கு பொருந்தும். இது தொடர்­பான ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டதும், புதிய விதி­முறை அம­லுக்கு வரும்.இவ்­வாறு அவர் கூறினார்.
* லண்­ட­னுக்கு தப்பி ஓடி விட்ட விஜய் மல்­லையா, வசதி இருந்தும் வங்கி கடனை திரும்ப தராதோர் பட்­டி­யலில் உள்ளார். அவர், தன் யுனைடெட் புரூ­வரீஸ் உட்­பட, பல்­வேறு நிறு­வ­னங்­களின் நிர்­வாக குழுக்­களில் முக்­கிய பொறுப்­பு­களில் உள்ளார். ‘செபி’யின் புதிய விதி­முறை அம­லுக்கு வந்தால், விஜய் மல்­லையா வகித்து வரும் அனைத்து பொறுப்­பு­களில் இருந்தும் தன்­னிச்­சை­யாக தகுதி இழப்­பிற்கு உள்­ளாவார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)