பதிவு செய்த நாள்
15 மார்2016
11:27
சென்னை : கலால் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நகைக்கடை வியாபாரிகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒருவாரத்திற்கு மேலாக நடந்து வந்த இந்த போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டு, தற்போது கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.760 சரிந்த நிலையில் இன்று(மார்ச் 15ம் தேதி) சவரனுக்கு ரூ.352 அதிகரித்துள்ளது.
சென்னை தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,746-க்கும், சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.21,968-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.29,370-க்கும் விற்பனையாகிறது.
அதேசமயம் வெள்ளியின் விலை சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 40 காசுகள் சரிந்து ரூ.39.90-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.555 குறைந்து ரூ.37,295-க்கும் விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|