உயர்­கி­றது வாகன காப்­பீட்டு பிரீ­மியம்உயர்­கி­றது வாகன காப்­பீட்டு பிரீ­மியம் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.22 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.22 ...
வரி விதிப்பால் வலி; மாநில அர­சு­க­ளுக்கு எதி­ராக வலை­தள நிறு­வ­னங்கள் போர்க்­கொடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2016
07:39

புது­டில்லி : வலை­தளம் வாயி­லாக விற்கப்படும் பொருட்­க­ளுக்கு, உத்­த­ர கண்ட், பீஹார், அசாம் ஆகிய மாநி­லங்கள், புதி­தாக நுழைவு வரி விதித்­துள்­ளன. இதைத் தொடர்ந்து, மேலும் பல மாநிலங்கள், நுழைவு வரி விதிக்க உள்­ள­தாக அறி­வித்­து உள்­ளன. இதனால், கொதித்­தெ­ழுந்­துள்ள வலை­தள நிறு­வ­னங்கள் ஒன்று திரண்டு, மாநில அர­சு­க­ளுக்கு எதி­ராக, போர்க்­கொடி துாக்கி­யுள்­ளன.
‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ உள்­ளிட்ட வலை­தள நிறு­வ­னங்கள், பல்­வேறு பொருட்­களை, வாடிக்­கை­யா­ளர்­களின் வீட்டிற்கே ‘டெலி­வரி’ செய்­கின்றன. இந்த வகையில், ஒரு மாநி­லத்தில் தயா­ரிக்­கப்­படும் பொருள், பல மாநி­லங்­களில் உள்­ளோ­ருக்கு நேர­டி­யாக விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது. இத்­த­கைய விற்­ப­னைக்கு, உத்­த­ரகண்ட், பீஹார், அசாம் ஆகிய மாநி­லங்கள் நுழைவு வரி விதித்­துள்­ளன. இதை­ய­டுத்து, குஜராத், மத்­தி­ய­பி­ர­தேசம், ராஜஸ்தான் உள்­ளிட்ட 12க்கும் அதி­க­மான மாநி­லங்கள், நுழைவு வரி விதிக்க திட்­ட­மிட்­டு உள்­ளன.
வழக்­க­மாக, ஒரு மாநி­லத்தில் தயா­ரிக்­கப்­படும் பொருள், வேறு மாநி­லத்தில் உள்ள முக­வர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்டு, அவர்கள் மூலம், மொத்­த­மா­க வோ, சில்­ல­ரை­யிலோ விற்பனை செய்­யப்­படும். ஆனால், வலை­தளம் மூலம் பொருட்கள் நேர­டி­யாக, நுகர்­வோரை சென்­ற­டை­வதால், வரி வருவாய் இழப்பு ஏற்­ப­டு­வ­தாக, மாநி­லங்கள் கூறு­கின்­றன. முக­வர்­களோ, ‘வலை­தளம் மூலம் குறைந்த விலையில் பொருட்கள் நேர­டி­யாக விற்­கப்­ப­டு­வதால், எங்கள் வியா­பாரம் பாதிக்­கப்­ப­டு­கி­றது’ என, புலம்புகின்­றனர். இதை கருத்தில் கொண்டு, வலை­தள நிறு­வ­னங்­களின் பொருட்­களை நுகர்­வோ­ரிடம் சேர்க்கும், ‘கூரியர்’ நிறு­வ­னங்­க­ளிடம், மாநில அர­சுகள் நுழைவு வரி விதிக்கத் துவங்­கி­யுள்­ளன.
இதற்கு, கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ள வலை­தள நிறு­வ­னங்கள், ‘ஏற்­க­னவே வரி செலுத்­திய பொருட்­க­ளுக்கு, மேலும் வரி விதிப்­பது, இரட்டை வரி விதிப்­பாகும்; மாநில அர­சு­களின் சட்ட விரோ­த­மான, பார­பட்ச வரி விதிப்பால், பொருட்­களின் விலையை உயர்த்த வேண்­டிய நெருக்­கடி ஏற்­பட்­டு உள்ளது’ என்­கின்­றன. இதைத் தொடர்ந்து, அனைத்து வலை­தள நிறு­வ­னங்­களும் ஒன்றிணைந்து, மாநில அர­சு­களுக்கு எதிராக, வழக்கு தொடர முடிவு செய்­துள்­ளன. ஏற்­க­னவே, ‘பிளிப்கார்ட்’ நிறுவனம், 10 சத­வீத நுழைவு வரி விதிக்­கப்­பட்­டதை எதிர்த்து, உத்தரகண்ட் அர­சுக்கு எதி­ராக வழக்கு தொடுத்­துள்­ளது.
கை மாறும் வியா­பாரம்:மத்­திய பிர­தே­சத்தில், கடை­களில் நடை­பெறும் விற்­ப­னை யில், 20 – 30 சத­வீதம், வலை­தள நிறு­வ­னங்­களின் கைக்கு மாறி­யுள்­ள­தாக ஆய்வில் தெரிய­வந்துள்­ளது. அதனால், வலை­தள பொருட்கள் விற்­ப­னைக்கு, 6 சத­வீதம் வரி விதிக்க, அம்­மாநில அரசு முடிவு செய்­து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)