பதிவு செய்த நாள்
18 மார்2016
06:02
மும்பை : நடப்பு நிதியாண்டில், பாதுகாப்பு மற்றும் விமான உதிரிபாக துறைகளில், டாடா குழுமத்தின் வருவாய், 2,650 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, டாடா குழும செயற்குழு உறுப்பினர் முகுந்த் ராஜன் கூறியதாவது: டாடா குழுமத்தை சேர்ந்த டாடா அட்வான்ஸ் சிஸ்டம்ஸ், டாடா அட்வான்ஸ் மெட்டிரியல், டாடா பவர் ஸ்டேரட்டர்ஜிஸ் இன்ஜினியரிங் டிவிஷன், டாடா டெக்னாலஜி, டாடா கன்சல்டன்சி, டாடா ஸ்டீல் என, பல நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் விமானம் உதிரிபாக துறைகளில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்த துறையில், வளர்ச்சி, ஆண்டுதோறும், 18 சதவீதம். நடப்பு நிதியாண்டில், வருவாய், 7.5 சதவீதம் உயர்ந்து, 2,650 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|