இனி­யெல்லாம் வசந்­தமே: எஸ்ஸார் ஸ்டீல் மகிழ்ச்சிஇனி­யெல்லாம் வசந்­தமே: எஸ்ஸார் ஸ்டீல் மகிழ்ச்சி ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.62 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.66.62 ...
வரும் 2020ம் ஆண்டு விமான போக்­கு­வ­ரத்து சந்­தையில் இந்­தியா 3வது இடத்தை பிடிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2016
06:14

ஐத­ராபாத் : ‘விமான போக்­கு­வ­ரத்து சந்­தையில், வரும், 2020ம் ஆண்டு, இந்­தியா மூன்­றா­வது இடத்­திற்கு முன்­னேறும்’ என, ‘பிக்கி – கே.பி.எம்.ஜி’ அமைப்பின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
மத்­திய விமான போக்­கு­வ­ரத்து துறை அமைச்சர் அசோக் கஜ­பதி ராஜு, ஐத­ரா­பாத்தில், ‘இந்­திய விமான கண்­காட்­சி’யை துவக்கி வைத்து, இந்­திய விமான துறையின் ஆய்­வ­றிக்­கையை வெளி­யிட்டார்.
அதன் விவரம்: கடந்த 2015ம் ஆண்டு, உள்­நாட்டு விமான போக்­கு­வ­ரத்து, 8.10 கோடி­யாக அதி­க­ரித்து, 20.3 சத­வீ­தத்­திற்கும் மேலாக வளர்ச்சி கண்­டுள்­ளது. வேறு எந்த நாடும், இது­போன்ற வளர்ச்­சியை காண­வில்லை. சர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நி­லை­யிலும், இந்­திய விமான துறை இத்­த­கைய சாதனை புரிந்­த­தற்கு, கச்சா எண்ணெய் விலை குறைவு மட்­டுமே காரணம் என, கூற­மு­டி­யாது. ஏனெனில், வேறு எந்த நாட்டின் விமான துறையும், இதே காலத்தில், இத்­த­கைய வளர்ச்­சியை காண­வில்லை என்­பதில் இருந்தே, இதை புரிந்து கொள்­ளலாம்.
இந்­திய விமான துறையின் வளர்ச்­சிக்கு, பல கார­ணங்கள் உள்­ளன. குறிப்­பாக, மத்­திய அரசின் தொழில் ஊக்­கு­விப்பு கொள்­கை­களால், நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி சூடு­பி­டித்து உள்­ளது. மக்­க­ளிடம், செல­வ­ழிப்­பிற்­கான பணப்­பு­ழக்கம் அதி­க­ரித்­துள்­ளது. இத்­துடன், விமான துறையில் நடை­பெற்று வரும் சீர்­தி­ருத்­தங்கள், 160க்கும் மேலான விமான நிலை­யங்­களின் புதுப்­பிப்பு மற்றும் விரி­வாக்கப் பணிகள்; அதன் விளை­வாக, மண்­டலம் மற்றும் சர்­வ­தேச அளவில் விரி­வ­டைந்து வரும் விமான சேவைகள் ஆகி­யவை, விமான துறையின் வளர்ச்­சிக்கு துணை­பு­ரிந்து வரு­கின்­றன.
மேலும், குறைந்த கட்­ட­ணத்தில் விமான சேவை வழங்கும் நிறு­வ­னங்கள் இடை­யி­லான போட்டி; விமான துறையில் குவிந்து வரும் அன்­னிய நேரடி முத­லீ­டுகள்; அதனால் பெருகும் அதி­ந­வீன தொழில்­நுட்ப வச­திகள் போன்­ற­வையும், விமான சேவை துறையை, எழுச்சி நடை போட வைத்­துள்­ளன. வரும் ஆண்­டு­களில், இந்த வளர்ச்சி மென்­மேலும் அதி­க­ரிக்கும் என்­பதால், தற்­போது, விமான போக்­கு­வ­ரத்து சந்­தையில், ஒன்­ப­தா­வது இடத்தில் உள்ள இந்­தியா, 2020ல், மூன்­றா­வது இடத்­திற்கு முன்­னேறும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
உச்­சத்தை நோக்கிநடப்பு, 2015 – 16ம் நிதி­யாண்டில், கடந்த ஜன­வரி வரையில், இந்­திய விமான துறை, 18.40 கோடி பய­ணி­களை கையாண்டு, 17.1 சத­வீத வளர்ச்­சியை கண்­டுள்­ளது. இது, வரும், 2020ல், 37 கோடி­யாக உயரும். அதில், உள்­நாட்டு பய­ணி­களின் எண்­ணிக்கை, 30 கோடி­யாக இருக்கும் – சர்­வ­தேச விமான போக்­கு­வ­ரத்து கழகம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)