பதிவு செய்த நாள்
18 மார்2016
06:13
மும்பை : ‘‘எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் மோசமான காலம், ஒருவழியாக முடிவடைந்து, தற்போது நல்ல காலம் பிறந்துள்ளது’’ என, எஸ்ஸார் குழுமத்தின் இயக்குனர், ஜே.மெஹ்ரா தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: மலிவு விலை உருக்கு பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு எடுத்த நடவடிக்கை, பயனளிக்கத் துவங்கியுள்ளது. உருக்கு துறை மெல்ல நிமிர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விலை சரிவால், உருக்கு உற்பத்திக்கான மூலப் பொருட்களின் விலை, குறைந்துள்ளது. இதனால், குஜராத்தில் உள்ள உருக்கு தொழிற்சாலையில், கடந்த ஆண்டு நவம்பர் முதல், உற்பத்தியும், விற்பனையும் இரு மடங்கு அதிகரித்துள்ளன. நிறுவனத்தின் லாபம், 5 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே, கடந்த மூன்றரை ஆண்டுகளில், நிறுவனம், 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்பத் தந்துள்ளது. நிறுவனர்களும், 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். தற்போது, நிறுவனம், லாப பாதைக்கு திரும்பியுள்ளதால், வரும் நிதியாண்டு மேலும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
‘‘கடந்த மாதம், 3.64 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டது. இது, இம்மாதம், 5 லட்சம் டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவில், சமீபத்தில் குத்தகைக்கு பெறப்பட்ட இரும்புத் தாது சுரங்கம், நிறுவனத்தின் உருக்கு உற்பத்தியை அதிகரிக்க துணை புரியும்’’ என, எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான திலீப் ஊமன் கூறினார்.
கடன் குறைவு தான்எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்திற்கு, தற்போது, 38 ஆயிரம் கோடி ரூபாய் தான் கடன் உள்ளது. அதிலும், 30 ஆயிரம் கோடி ரூபாய், நீண்ட கால கடன் ஆகும். இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் தடையாக இருக்காது.–மகாதேவ ஐயர் தலைமை நிதி அதிகாரி, எஸ்ஸார் ஸ்டீல் இந்தியா
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|