பதிவு செய்த நாள்
25 மார்2016
07:47
மும்பை : ‘இறக்குமதிகளாலும், சிக்கலான ஒழுங்குமுறை சூழலாலும், உள்நாட்டு மருத்துவ சாதனங்கள் துறை, தற்போது மிகவும் சிறியதாக இருக்கிறது. இருப்பினும், 2020ம் ஆண்டில் இந்த சந்தை, 15 சதவீத வளர்ச்சியை, அதாவது சுமார், 8.6 பில்லியன் டாலர் வளர்ச்சியை கொண்டதாக இருக்கும். மேலும் அது, 2025ம் ஆண்டில் சுமார், 50 பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி காண்பதற்கு வாய்ப்பு இருக்கிறது’ என, டிலாய்ட் மற்றும் என்.ஏ.டி. ஹெல்த் அறிக்கை தெரிவித்திருக்கிறது.அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:உலக அளவிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான சந்தை, 2020ம் ஆண்டில் சுமார், 520 பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.தொழில்நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் ஆகியவை, இந்த துறையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|