பதிவு செய்த நாள்
29 மார்2016
23:31
புதுடில்லி : கடந்த மூன்று மாதங்களாக, தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த, நாட்டின் வர்த்தகச் சூழல் குறியீட்டு எண், நடப்பு மார்ச்சில் முதன் முறையாக சரிவடைந்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த, எம்.என்.ஐ., ஆய்வு நிறுவனம், உலக நாடுகளின் பொருளாதாரச் சூழல், நிறுவனங்களின் செயல்பாடு, அரசு கொள்கைகளால் உண்டாகும் தாக்கம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், மாதந்தோறும், வர்த்தகச் சூழல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
ஆய்வறிக்கைஇதன்படி, எம்.என்.ஐ., நிறுவனம், இந்தியாவில், நடப்பு மார்ச் மாதம் நிலவிய வர்த்தகச் சூழல் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளை அளவுகோலாக வைத்து, இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
அதன் விவரம்:நடப்பு மார்ச் மாதத்திற்கான இந்தியாவின் வர்த்தகச் சூழல் குறியீட்டு எண், 62.7 புள்ளிகளாக சரிவடைந்துள்ளது. இது, பிப்ரவரியில், 63.5 ஆக இருந்தது. வரும் ஏப்ரல், 5ல், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், மூலப் பொருட்கள் விலை உயர்வால், குறிப்பிட்ட அளவிற்கே, வட்டி குறைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாக, நடப்பு மார்ச் மாதம், தயாரிப்பு துறை நிறுவனங்களின் வர்த்தகம் மந்தமடைந்துள்ளது. அதேசமயம், கட்டுமானம் மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. இத்துறை நிறுவனங்களின் வர்த்தகம் நன்கு உள்ளது.கடந்த பிப்ரவரியில், தயாரிப்பு துறையில், மிகக் குறைவான நிறுவனங்கள் மட்டுமே, புதிய, ‘ஆர்டர்’ மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை பெற்றுள்ளன. இதன் தாக்கம், நடப்பு மாதத்தில் எதிரொலித்துள்ளது.
பொருட்களின் விலைமூலப் பொருட்கள் விலை உயர்வால், நிறுவனங்கள் தயாரிப்பு பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளன; இது, வரும் மாதங்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது. அதனால், இனி வரும் மாதங்களில் தயாரிப்பு பொருட்களுக்கான தேவை பெருமளவு உயரும் என்று கூற முடியாது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும், நிறுவனங்களை பாதித்துள்ளது. இதனால், இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
காலம் குறியீட்டு எண்2015 டிச., 60.702016 ஜன., 61.80பிப்., 63.50மார்ச் 62.70
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|