பதிவு செய்த நாள்
04 ஏப்2016
06:25
புதுடில்லி : பிரபல, ‘ஆப்பிள்’ நிறுவனம் துவங்கி, 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணம், லாஸ் அல்டாஸ் நகரில், ஒரு சிறிய கேரேஜில், ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், 1976, ஏப்., 1ம் தேதி உதயமானது. ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக், ரொனால்டு வேன் ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து, கம்ப்யூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இறங்கினர். முதன் முதலாக, 1976, ஜூலையில், ‘ஆப்பிள்’ கம்ப்யூட்டர் விற்பனை துவங்கியது. ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக, 1981ல் பொறுப்பேற்றார். 1987ல், வண்ணத்தில், ‘மேக்கின்டாஷ் 2’ கம்ப்யூட்டர் அறிமுகமானது. இதையடுத்து, ‘ஐடியூன், ஐபோட், ஐபாட், ஐபோன்’ சாதனங்கள் அறிமுகமாயின. கடந்த, 2014ல், ‘ஆப்பிள் வாட்ச்’ என்ற கைகடிகார ஸ்மார்ட் போன் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகளவில், ஆப்பிள் ஐபோன் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|