பதிவு செய்த நாள்
05 ஏப்2016
23:35
கோயம்புத்துார் : கவாசகி நிறுவனம், இரு சக்கர வாகன விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கவாசகி நிறுவனம், இந்தியாவில், இரு சக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 501 சிசி திறன் உடைய, இரு சக்கர வாகன விற்பனையில், 20 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு உள்ளது. தற்போது, இந்நிறுவனம், விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் புதிய விற்பனை முகவர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. முகவர்களை அதிகப்படுத்துவதோடு, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தன் தொழிற்சாலையில் வாகன உற்பத்தி திறனை அதிகப்படுத்தவும் கவாசகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், 2015 – 16ம் நிதியாண்டில், 60 கோடி ரூபாய்க்கு, உதிரி பாகங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 30 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|