பதிவு செய்த நாள்
05 ஏப்2016
23:37
புதுடில்லி : ‘‘சேவைகள் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், சர்வதேச வர்த்தகத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதற்கான தொழில்நுட்ப உதவிகளை, மத்திய அரசு வழங்க வேண்டும்,’’ என, மத்திய வர்த்தக துறை செயலர் ரீடா தியோதியா தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: சேவைகள் துறை ஏற்றுமதியில், ஐ.டி., மற்றும் ஐ.டி.இ.எஸ்., துறைகள் முதுகெலும்பாக உள்ளன. அதேசமயம், சர்வதேச சேவைகள் வர்த்தகத்தில், இந்தியாவின் பங்களிப்பு, வெறும், 3.15 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. இந்திய கல்வி மையங்கள், சேவைகள் துறையில், மிகச் சிறந்த வல்லுனர்களை, குறைந்த செலவில் உருவாக்குகின்றன. இத்துறையில், ஏராளமான மனித வளமும், ஆற்றலும் உள்ள போதிலும், அவற்றின் மூலம், சர்வதேச வர்த்தகத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது.இத்துறை ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை, அரசு ஏற்படுத்தி தரும்பட்சத்தில், அயல்நாட்டு வர்த்தகத்தை பெருமளவு கைப்பற்ற முடியும்.
சேவைகள் துறையில் உள்ள சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை வெளிப்படுத்தும் நோக்கில், டில்லியில், வரும், 21ம் தேதி, ‘சர்வதேச சேவைகள் கண்காட்சி’ நடைபெற உள்ளது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 3,500க்கும் அதிகமான சேவை நிறுவனங்கள் பங்கு பெற உள்ளன. இவ்வாறு மத்திய வர்த்தக துறை செயலர் ரீடா தியோதியா கூறினார்.
வேலைவாய்ப்புசேவைகள் துறையில், ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., போக்குவரத்து, ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவைகள் துறை, 53 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இது, அன்னிய நேரடி முதலீட்டில், 51 சதவீதம்; வேலைவாய்ப்பில், 28 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|