பதிவு செய்த நாள்
10 ஏப்2016
03:56
லண்டன்:பிரிட்டனில், சவுத் யார்க் ஷையர் நகரில், டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு சொந்தமான, ‘ஸ்பெஷாலிட்டி ஸ்டீல்ஸ்’ நிறுவனம் இயங்கி வருகிறது.
கடந்த ஆண்டு, இந்நிறுவனம், உருக்கு பொருட்களின் தரப் பரிசோதனை நடைமுறையை, சரிவரப் பின்பற்றாமல் சான்றிதழ் வழங்கியுள்ளது. இதை, டாடா ஸ்டீல் தணிக்கை குழு கண்டு பிடித்தது.இதையடுத்து, தரப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் வழங்குவதில் விதிமீறலில் ஈடுபட்ட, ஒன்பது ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
அத்துடன், பிரிட்டன் தொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டு சட்டப்படி, தீவிர குற்றத் தடுப்பு அலுவலகத்திலும், இந்த விவரங்களை டாடா ஸ்டீல் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, அந்த உருக்கு பொருட்களை நேரடியாக வாங்கிய, 450 வாடிக்கையாளர்களுக்கும், 150க்கும் மேலான மறைமுக வாடிக்கையாளர்களுக்கும், முறைப்படி இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர் இழப்பு காரணமாக, பிரிட்டனில் உள்ள உருக்கு தொழிற்பிரிவுகளை மூடப் போவதாக, சமீபத்தில், டாடா ஸ்டீல் அறிவித்தது. இதையடுத்து, ஸ்பெஷாலிட்டி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் தரப் பரிசோதனை விதிமீறல் குறித்த விசாரணையை, தீவிர குற்றத் தடுப்பு அலுவலகம் துவக்கிஉள்ளது.
இதனிடையே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, சஞ்சீவ் குப்தா, பிரிட்டனில், டாடா உருக்கு தொழிற்பிரிவை வாங்குவது குறித்து, நாளை பேச்சு நடத்த உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|