பதிவு செய்த நாள்
12 ஏப்2016
07:45
மும்பை : ‘ஈரானில், பெட்ரோலிய ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் உரத் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக, 1.35 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, இந்திய நிறுவனங்கள் தயாராக உள்ளன’ என, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார்.இரு நாள் அரசு முறை பயணமாக, ஈரான் சென்ற அமைச்சர், அந்நாட்டின் பெட்ரோலியத் துறை அமைச்சர் பிஜன் சங்கனேவை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா – ஈரான் இடையே, கச்சா எண்ணெய், பெட்ரோலிய ரசாயனம், இயற்கை எரிவாயு உள்ளிட்டவை சார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஈரானில், சபஹர் சிறப்பு பொருளாதார மண்டலம் உட்பட, பெட்ரோலிய ரசாயனம், உரம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களில், இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய தயாராக உள்ளதாக, அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிப்பதாக, ஈரான் உறுதி அளித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|