பதிவு செய்த நாள்
16 ஏப்2016
07:22
புதுடில்லி : நாள் தோறும், புது மொபைல் போன்கள் சந்தையில் அறிமுகமாகி வரும் நிலையில், எச்.டி.சி., நிறுவனமும், 4ஜி அலைவரிசையில் இயங்க கூடிய, ஸ்மார்ட் போன்களை, விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதுகுறித்து, எச்.டி.சி., நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், எச்.டி.சி., நிறுவனம், பல புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில், எச்.டி.சி., 10 என்ற பெயரில் புதிய போனை, அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இது, விரைவில் இந்திய சந்தைக்கு வரும். இந்த போன், 5.2 அங்குலம் திறனுடையதாக இருக்கும். ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால், 27 மணி நேரமும் தொடர்ந்து பேச முடியும். இதில், அதி விரைவில் இயக்க கூடிய மென் பொருட்கள் உள்ளதால், இணைய சேவை, பதிவிறக்கம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும், விரைவாக மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|