பதிவு செய்த நாள்
16 ஏப்2016
07:23
புதுடில்லி : எல்.ஜி., நிறுவனம், இந்தியாவில், ஸ்மார்ட் மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்து உள்ளது.
தென் கொரிய நாட்டைச் சேர்ந்த எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், நுகர்வோர் மின் சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தற்போது இந்தியாவில், ஸ்மார்ட் போன் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, எல்.ஜி., நிறுவனத்தின் இந்திய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில், ஸ்மார்ட் போன்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போன் விற்பனையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இந்தியாவில் உள்ள நொய்டாவில், ஆண்டுக்கு, 10 லட்சம் ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கும் திறன் உடைய, தொழிற்சாலை ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த ஆலையில், கே வரிசை கொண்ட, போன்கள் முதலில் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|