பதிவு செய்த நாள்
20 ஏப்2016
23:24
சென்னை : ‘நேஷன்ஸ்டார் மார்ட்கேஜ்’ நிறுவனம், சென்னையில், மென்பொருள் உருவாக்கும் அலுவலகத்தை துவக்கி உள்ளது. இதுகுறித்து, நேஷன்ஸ்டார் மார்ட்கேஜ் நிறுவன இந்திய தலைமை அதிகாரி ஆனந்த் மோகன்ராம் கூறியதாவது: அமெரிக்காவில், வீட்டு கடன் வழங்கும் சேவைகளை கண்காணிக்கும் பணியில், நேஷன்ஸ்டார் ஈடுபட்டு வருகிறது. அங்கிருப்பவர்கள் விண்ணப்பிக்கும் வீட்டு கடனுக்கான ஆவணங்களை பரிசீலிப்பது, கடன் திரும்ப செலுத்துவதை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை, எங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போது, கடன் வழங்குவதற்கான பரிசீலனைகளை முடிக்க, 60 நாட்கள் ஆகிறது. இந்த காலதாமதத்தை தவிர்த்து, விரைவாக முடிப்பதற்காக தேவைப்படும் மென்பொருளை உருவாக்குவதற்காக, சென்னையில் நேஷன்ஸ்டார் அலுவலகம் துவங்கப்பட்டு உள்ளது. இந்த சென்னை அலுவலகத்தில், 500 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|