பதிவு செய்த நாள்
20 ஏப்2016
23:26
புதுடில்லி : கோடை விடுமுறையை முன்னிட்டு, ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனம், டில்லியில் இருந்து, குறிப்பிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் விமான சேவையை, கூடுதலாக இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, தற்போது, ஸ்பைஸ் ஜெட், டில்லி மற்றும் தர்மசாலா இடையில், இரண்டு விமான சேவைகளை செயல்படுத்தி வருகிறது; தற்போது, கூடுதலாக ஒரு சேவை வழங்க உள்ளது.சண்டிகர் – டில்லி இடையில், மூன்று விமான சேவைகள் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக, ஒரு சேவை இயக்க உள்ளது. டில்லி – அமிர்தசரஸ் இடையில், இரண்டு விமான சேவைகளை வழங்க, ஸ்பைஸ் ஜெட் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோடை விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால், விமான பயணத்திற்கு தேவை அதிகரித்து உள்ளதால், கூடுதலாக விமான சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|