பதிவு செய்த நாள்
23 ஏப்2016
06:16
புதுடில்லி : உஜ்ஜிவன் பைனான்சியல், பங்கு வெளியீட்டின் மூலம், 855 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது. உஜ்ஜிவன் பைனான்சியல் நிறுவனம், சிறு வங்கி துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 885 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்து உள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, ஏப்., 28ல் துவங்கி, மே, 2ல் முடிவடைகிறது. ஒரு பங்கின் விலை, 207 ரூபாய் – 208 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் புதிய பங்குகள் மூலம், 358 கோடி ரூபாயும், மூன்று வெளிநாட்டு நிறுவன பங்குதாரர்கள், தங்களின் பங்கை விற்பனை செய்வதன் மூலம், 527 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது. இந்நிறுவனத்தில், மொரீஷியஸ் யூனிடஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், 2.49 சதவீத பங்குகள்; டபிள்யூ.சி.பி., ஹோல்டிங்ஸ், 3.06 சதவீதம்; உமன் வேர்ல்டு பேங்கிங் கேப்பிடல், 5.34 சதவீத பங்குகளை கொண்டு உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|