பதிவு செய்த நாள்
23 ஏப்2016
06:14
புதுடில்லி : ‘உள்நாட்டில், 30 சதவீத உதிரிபாகங்களை கொள்முதல் செய்ய வேண்டும்’ என்ற நிபந்தனையை தளர்த்துமாறு, மத்திய அரசுக்கு, ஆப்பிள் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின், ஐபோன் உள்ளிட்ட அனைத்து சாதனங்களுக்கும், இந்தியாவில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்நிறுவனம், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தன் பொருட்களை, இந்திய சந்தைக்கு இறக்குமதி செய்து, விற்பனைக்கு விடுக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் உதிரிபாகங்கள் தரமானதாக இல்லை என இதற்கு காரணம் கூறப்படுகிறது. மத்திய அரசின் விதிப்படி, ஒரு நிறுவனம் தன் தயாரிப்புகளில், 30 சதவீத உதிரிபாகங்களை உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். இந்த நிபந்தனையை தளர்த்துமாறு, மத்திய அரசிடம் ஆப்பிள் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|