பதிவு செய்த நாள்
25 ஏப்2016
00:18
புதுடில்லி : விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 2007ல், சஹாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை, 1,450 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இதையடுத்து, சஹாரா ஏர்லைன்ஸ் பெயரை, ஜெட்லைட் என மாற்றி, குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கிவந்தது. கடந்த ஆண்டு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழு, ஜெட்லைட் நிறுவனத்தை இணைத்துக் கொள்ள முடிவு செய்தது; இதற்கு, பங்கு முதலீட்டாளர்களின் ஒப்புதலை பெற வேண்டும் என, கடந்த மாதம், மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த, 22ம் தேதி நடைபெற்ற பங்கு முதலீட்டாளர்கள் கூட்டத்தில், இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை, மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்த, ஜெட் ஏர்வேஸ், இந்த இணைப்பால், அதன் நிதி நிர்வாகம் வலுப்படும் என, கூறியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|