பதிவு செய்த நாள்
26 ஏப்2016
01:19
புதுடில்லி : ‘கேட்பரி’ இந்தியா நிறுவனம், ஆந்திர மாநிலத்தில், சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. மான்டலெஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த கேட்பரி இந்தியா, சாக்லேட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஆந்திராவில் உள்ள ஸ்ரீ சிட்டியில், 19 கோடி டாலர் மதிப்பில், புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்க உள்ளது. இந்த ஆலையின் அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடந்தது. மொத்தம், 134 ஏக்கரில் அமைய உள்ள, கேட்பரி நிறுவனத்தின் தொழிற்சாலையின் மூலம், 1,600 பேருக்கு வேலை கிடைக்க உள்ளது. இந்த ஆலையில் முதற்கட்டமாக, ஆண்டுக்கு, 60 ஆயிரம் டன் திறனுடைய, ‘டெய்ரி மில்க்’ சாக்லேட் தயாரிக்கப்பட உள்ளது. பின், 2020ல் ஆண்டுக்கு, 2.50 லட்சம் டன் சாக்லேட் தயாரிக்கும் திறனுடையதாக அதிகரிக்கப்பட இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|