பதிவு செய்த நாள்
26 ஏப்2016
01:22
புதுடில்லி : பார்தி ஏர்டெல் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனை சேவைகளை, ஒரே குடையின் கீழ் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தற்போது, ஏர்டெல் வாடிக்கையாளர்கள், வலைதளத்திலும், ‘மைஏர்டெல்’ என்ற ஆப் வாயிலாகவும், மொபைல் போன், பிராட்பேண்டு, டி.டி.எச்., உள்ளிட்ட சேவைகளுக்கு பணம் செலுத்தி வருகின்றனர். டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும், ‘மொபைல் வாலெட்டுகள்’ மூலம், ‘ரீசார்ஜ்’ செய்வதற்காக பணம் செலுத்துகின்றனர். இதில், பல்வேறு பிரச்னைகளை, வாடிக்கையாளர்கள் சந்தித்து வருவதால், அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும், ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைக்க, பார்தி ஏர்டெல் முடிவு செய்துள்ளது. ‘இதன் மூலம், வாடிக்கையாளர்கள் சுலபமாகவும், விரைவாகவும் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்’ என, பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|