பதிவு செய்த நாள்
03 மே2016
06:39
மும்பை : வளரும் நாடுகளுக்கான ஆய்வு மற்றும் தகவல் அமைப்பின் கூட்டம், மும்பையில் நடைபெற்றது. இதில், மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியதாவது:கடந்த, 16 மாதங்களாக, நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி பின்னடைவைக் கண்டு வருகிறது. ஏற்றுமதியை ஊக்குவிக்க, சீனாவின் வழியை நாம் பின்பற்ற வேண்டும். சீனா, அதன் உள்நாட்டு யுவான் கரன்சியின் மதிப்பை குறைத்தது. அதனால், சீனாவின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. அதுபோல, ரூபாய் மதிப்பையும் குறைக்கலாம் என்பது என் கருத்து. தற்போது, அதற்கான தேவையும் எழுந்துள்ளது. சர்வதேச வர்த்தகத்தை பொருத்தவரை, இந்தியா, இலக்கின்றி செயல்படவில்லை. எங்கே செல்ல வேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பணக்கார நாடுகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பாதுகாப்பாக உள்ளதை போல், இந்தியா உருக்கு துறையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|