பதிவு செய்த நாள்
03 மே2016
06:42
சென்னை : மாத ஊதியம் பெறுபவர்களுக்கு ஏற்படும், ‘மாதக் கடைசி’ பிரச்னைகளை சமாளிக்க, குறுகிய காலக்கடன் திட்டத்தை, ஆன்லைனில் கொண்டு வந்திருக்கிறது, எர்லிசாலரி டாட் காம் நிறுவனம்.மாத ஊதியம் பெறுபவர்கள், மாதக் கடைசியில் பணம் இல்லாமல் தவிப்பது அனைவரும் அறிந்ததே. இவர்களுக்காக, 7 முதல் 30 நாட்கள் வரையிலான குறுகிய காலக்கடன் திட்டத்தை, சென்னையில் அறிமுகம் செய்துள்ளது எர்லிசாலரி டாட் காம் நிறுவனம். புனேவை சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், உடனடியாக பணம் பெறுவதற்காக மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது. புனே மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் இத்திட்டம் ஏற்கனவே அறிமுகம் ஆகியுள்ளது.இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அக் ஷய் மெஹ்ரோத்ரா கூறும்போது, ‘‘சென்னை போன்ற தொழில்நுட்ப நகரங்களில், எங்களுக்கு மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது. இளைஞர்களுக்கு இத்திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|