பதிவு செய்த நாள்
04 மே2016
00:39
பெங்களூரு : காலநிலை மாற்றம், உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்றவற்றால், தேயிலை தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என, தென்னிந்திய தேயிலை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா, ஆண்டுதோறும் சராசரியாக, 120 கோடி டன் தேயிலை உற்பத்தி செய்கிறது. 23 கோடி டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தென் மாநிலங்களில், 24 கோடி டன் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு, 9 கோடி டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தென்னிந்திய தேயிலை கூட்டமைப்பின் தலைவர் தர்மராஜ் கூறியதாவது:காலநிலை மாற்றத்தால், தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தேயிலை உற்பத்தி செலவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தர வேண்டி உள்ளது. ஆனால், தேயிலை விலை குறைவாக உள்ளது. இதனால், கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|