பதிவு செய்த நாள்
06 மே2016
04:08
புதுடில்லி : அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை, ‘பிளிப்கார்ட்’ மீறியதாக, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு, புகார் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து, மத்திய தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிளிப்கார்ட் நிறுவனம், தன் இணையதளத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை, அவற்றின் தள்ளுபடி விலை ஆகியவற்றை, பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. இதனால், மற்ற வர்த்தகர்கள், தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கின்றனர். அன்னிய நேரடி முதலீட்டின் கீழ், இ – காமர்ஸ் நிறுவனங்கள் குறித்த மார்ச் மாத விதிமுறைகளை மீறி, பொருட்களின் தள்ளுபடி விலையை, பிளிப்கார்ட் விளம்பரப்படுத்தி உள்ளது என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு புகார் அளித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|