பதிவு செய்த நாள்
06 மே2016
04:12
பிராங்பர்ட் : உலகிலேயே, அதிக மதிப்புள்ள ஒற்றை கரன்சிகளில் ஒன்றாக, 500 யூரோ மற்றும் 1,000 சுவிஸ் பிராங்க் ஆகியவை உள்ளன. இந்நிலையில், 500 யூரோ, சட்ட விரோத பணப் பரிமாற்றத்திற்கும், பயங்கரவாத குழுக்களுக்கும், குற்றச் செயல்களுக்கும் அதிகமாக பயன்படுவது தெரியவந்துள்ளது. இதையடுத்து, 500 யூரோ அச்சடித்து வெளியிடுவதை, 2018ம் ஆண்டு இறுதியில் நிறுத்த உள்ளதாக, ஐரோப்பிய மத்திய வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள, 500 யூரோ கரன்சிகள் செல்லுபடியாகும்; இந்த கரன்சிகளை கொடுத்து, அதற்கு சமமான, குறைந்த மதிப்புள்ள கரன்சிகளை வாங்கிக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்து லட்சம் யூரோ மதிப்புள்ள, 500 யூரோவின் எடை, 2.2 கிலோ ஆகும்; இதை, ஒரு சிறிய லேப்–டாப் பையில் அடக்கி விடலாம். இது சமூக விரோதிகளுக்கு வசதியாக இருக்கிறது என்பதால், 500 யூரோ அச்சடிப்பு நிறுத்தப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|