பதிவு செய்த நாள்
09 மே2016
15:56
புதுடில்லி : இபிஎப் கணக்குகளில் ரூ.43,000 கோடி பணம் பயனற்ற நிலையில் இருந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த கணக்குகளில் பிஎப் தொகைக்கான வட்டி தொகையும் சேர்ந்து வருவதால், பயனற்று கிடக்கும் தொகையின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது, 2015-16 ம் நிதியாண்டில் விண்ணப்பித்த 118.66 லட்சம் பேருக்கு இபிஎப் தொகை பட்டுவாடா செய்தாகி விட்டது. இவர்களில் 98 சதவீதம் பேருக்கு அவர்கள் விண்ணப்பித்த 20 நாட்களுக்குள் பண பட்டுவாடா செய்தாகி விட்டது. இது தவிர இபிஎப் கணக்கில் சுமார் ரூ.43,000 கோடி பயனற்ற நிலையில் உள்ளது.
இந்த தொகைக்கு வட்டியும் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 1.18 லட்சம் இபிஎப் விண்ணப்பதாரர்களுக்கு பட்டுவாடா செய்யாமல் இன்னும் நிலுவையில் உள்ளது. இத்தகைய நிலையை மாற்ற இபிஎப் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|