பதிவு செய்த நாள்
09 மே2016
16:12
சென்னை : அட்சயதிரிதியை நாளான இன்று சர்வதேச தங்கம் மார்க்கெட் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்தியாவிலும் தங்கம், வெள்ளியின் விலை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் நகைக்கடைகளில் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அட்சயதிரிதியை நாளில் 50 கிலோ வரை தங்கம் விற்பனையானது. ஆனால், இதற்கு நேர் எதிராக இந்த தங்கம் விலை நாள் முழுவதும் சரிவை சந்தித்துள்ளது. விலை குறைந்த போதிலும் தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
சென்னையில் இன்று மாலை நேர நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து ரூ.22,744 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.2843 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளிவிலை ரூ.240 குறைந்து ரூ.41,635 க்கும், கிராம் 30 காசுகள் குறைந்து ரூ.44.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|